களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட
கிராமங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

0
135

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றாடலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கமைய மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் வீடு வீடாகச் சென்று நேற்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரதேசத்திலுள்ள அரச அரசசார்பற்ற நிறுவனங்கள்பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு அவற்றை இல்லாதொழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாடசாலைகள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்ட்டன.