காசாவில் போரினால்பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குஉதவும் பொருட்டு, காத்தான்குடியில்நிதி சேகரிப்பு

0
99

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவும் பொருட்;டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்திற்கு, வழங்குவதற்கு
மட்டக்களப்பு காத்தான்குடியில், ஜூம் ஆத் தொழுகையின் பின்னர் நிதி சேகரிக்கப்பட்டது.
காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை ஆகியவற்றின்
ஏற்பாட்டில் சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
காத்தான்குடி மற்றும் அதனை அன்மித்துள்ள முஸ்லிம் கிராமங்களிலுள்ள ஜூம்ஆப் பள்ளி வாயல்களில்
ஜூம் ஆ தொழுகைக்காக வந்த பொது மக்களிடம் இந்த நிதி சேகரிக்கப்பட்டதுடன் பள்ளி வாயல்களின் நிர்வாகிகளும் நிதி சேகரிப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சேகரிக்கப்பட்ட நிதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.