காட்டு யானையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக் கோரி மட்டு.செங்கலடியில் பேரணி

0
130

வாழ்வாதாரத்தை அழிக்கும் காட்டு யானைகளில் இருந்து மனித உயிர்களையும், வேளாண்மைச் செய்கைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,
மட்டக்களப்பு செங்கலடியில் பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் சூழல் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் செடெக் நிறுவனம் மற்றும் மிசரியர் நிதி அனுசரணையில் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச
மறுமலர்ச்சி பெண்கள் அமைப்புகள், மீனவக் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து இந்த அமைதி வழி பேரணியை முன்னெடுத்தன.
செங்கலடி பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அமைதி வழி பேரணி செங்கலடி பிரதேச செயலகம் வரை
இடம்பெற்றது.
பேரணியில் கலந்து கொண்ட அமைப்புகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து பேரணி முடிவுறுத்தப்பட்டது.