காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்!

0
185

காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும், காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறு வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.