மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனக் கூட்டம் இன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அஹதிய்யா பாடசாலைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் புதிய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளன புதிய தலைவராக மௌலவி எச்.எம்.சாஜஹான், செயலாளராக மௌலவி ஏ.எம்.எம்.பாயிஸ், பொருளாளராக மௌலவி இர்சாத், பிரதி தலைவர்களாக அஷ்ஷெய்க் எஸ்.ஐ.நழீம் நழீமி, மௌலவி எம்.ரமழான், மௌலவி எம்.ஐ.முஸ்தகீம், பிரதி செயலாளராக மௌலவி எம்.ஐ.எம்.சாவாஹிர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஹதிய்யா பாடசாலைகளை ஸ்தாபித்து மாவட்டத்தில் அஹதிய்யா சம்மேளனத்தையும் உருவாக்கி அதற்காக உழைத்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ. செய்யித் முஹமத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளன தலைவராக இருந்து செயற்பட்ட மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.