மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி கர்பலா வீதியில் புதன்கிழமை மாலை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் முதியவர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
அவ்வீதியினால் ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது அவ்வீதியில் துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில் இரண்டு இளைஞர்கள் மற்றும் அந்த முதியவர் அடங்களாக 3 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.