காத்தான்குடி நகர சபை உறுப்பினர்
இல்லத்தில் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு

0
222

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ரஊப் ஏ மஜீத் அவர்கள் இல்லத்தில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி கடற்கரையிலுள்ள மேற்படி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ரஊப் ஏ மஜீத்;தின் வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்து ஜெனரேட்டர் ஒன்றும் பித்தாளையிலான புராதன பொருள் ஒன்றும் திருடப்பட்டுள்ளது

திருடிய சந்தேக நபர் இப்பொருட்களை விற்பனை செய்ய முற்பட்டபோது சம்பவத்தை விசாரணை செய்து வந்த காத்தான்குடி பொலிசார் சந்தேக நகரை கைது செய்துள்ளதுடன் அவர் திருடிய மேற்படி பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு அதிகாரி ஏ.எஸ்.எம் ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையையடுத்து மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடிய பொருட்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் திருடப்பட்ட பொருட்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.