காரைதீவில் உணவுப் பாதுகாப்பு குறித்து விசேட விழிப்புணர்வு

0
201

உணவு பாதுகாப்புத்தினம் 2022 முன்னிட்டு காரைதீவு பிரதேசத்தில் விசேட விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

உணவு பாதுகாப்புத்தினம் 2022 முன்னிட்டு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார பரிசோதகர்களால் உணவகங்கள் கடைகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன.

இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் உணவு கையாளுகின்ற நிறுவனங்களின் வேலையாட்களுக்கான உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் விஷேட வளவாளராக கல்முனைப் பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் பி.வரதராஜன் கலந்து கொண்டு உணவு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயங்கள் தொடர்பாக வருகை தந்தவர்களுக்கு பூரண விளக்கமளித்தார்கள்.

வருகை தந்தவர்களுக்கு பயிச்சி நெறியினைப் பெற்றுக் கொண்டதற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசேதகர்கள் பகுதிச் சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டார்கள்