காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய முத்துச்சப்புற பவனி

0
223

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர மகோற்சவத்தினை முன்னிட்டு 08ம் நாளான நேற்று இரவு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து தேரோடும் வீதி வழியாக முத்துச்சப்புற பவனியானது அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெண்கள் வடப்பிடித்து இழுக்க மிகவும் பக்தி பூர்வமாக தேரோடும் வீதிகளில் நகர்ந்து சென்றது.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் தலைமையில் ஊர்வல நிகழ்வுகள் இடம் பெற்றது. அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தினை பெண்களே வடம் பிடித்து இழுத்துச் சென்றது மிகச் சிறப்புமிக்க விடயமாக கருதப்படுகிறது. சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் கலந்து கலந்து கொண்டனர்.