காலாவதியான தீர்மானங்களால் ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது! – சஜித் சுட்டிக்காட்டு

0
103

காலாவதியான தீர்மானங்களால் எதிர்நோக்கியுள்ள ஆபத்திலிருந்து நாட்டை மீட்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மக்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் பல பொது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளன. பொருளாதார பிரச்சினையால் நாடு பாரியளவில் பின்தங்கியுள்ளது.

எனவே, இந்த ஆபத்திலிருந்து இலங்கையை முன்கொண்டு செல்வதற்குக் காலாவதியான தீர்வுகளால் முடியாது.

நாட்டின் சொத்துக்களைத் தமது தனிப்பட்ட காரணிகளுக்காகக் கொள்ளையிடுவதற்கு எவரையும் அனுமதிக்கப் போவதில்லை” – என்றார்.