கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில், இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக, இன்று காலை, போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, கைது செய்யாதே கைது செய்யாதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாதே, நிறுத்து நிறுத்து அடக்குமுறைகளை நிறுத்து,
வேண்டும் வேண்டும் ஜனநாயக உரிமை. என பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாங்கியிருந்தனர்.