நாட்டின் கால்நடைத் துறையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட மிகப் பெரிய தொகை அடுத்த மூன்று வருடங்களில் கிடைக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உலக வங்கி 2023-2027 ஆண்டுகளில் விவசாயத் துறைக்கு 3,800 மில்லியன் ரூபா தொகையை வழங்க உள்ளது இந்த தொகையில் ரூ.1,500 மில்லியன் கால்நடை துறை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர விவசாய வலயங்களில் வீதி வலையமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரையில் புனரமைக்கப்படாத கிராமப்புற விவசாய வீதிகளை புனரமைப்பதற்காக இந்த நிதி ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை விவசாயத் திட்டங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை (14) விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒதுக்கப்பட்ட அதிக தொகை எனவும் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக கால்நடைத் துறைக்கு அதிக நிதி இல்லாததால், நாட்டின் பால் மற்றும் முட்டை உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த கோழித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.