கிறிஸ்து உயிர்ப்பு விழாவினை முன்னிட்டு கனடா டொரன்டோ நேயம் பவுண்டேஷன் நிறுவனத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
புனித பெரியன்னை பேராலய பங்கை சேர்ந்த 75 பேருக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிரீன்பீல்ட்மண்டபத்தில் இடம்பெற்றது
கிரீன்பீல்ட் சனசமூக நிலையத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க
கனடா நேயம் பவுண்டேஷன் நிறுவனத்தினரால் ஏற்கனவே இடர் நிலைகளின் போது மக்களுக்கு பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டநிலையில் தற்போது நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.