இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கிளிநொச்சியில் இயற்கை விவசாய அறிமுக ஊக்குவிப்பு மற்றும் இலவச பயிற்சி இன்று நடைபெற்றது.
திருவையாறு பரமேஸ்வரன் சுதாகர் வழிகாட்டலில் எற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் கலந்து சிறப்பித்தார், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், துறைசார் உத்தியோகத்தர்களும் நிகழ்வில்; கலந்து கொண்டனர்.