கிளிநொச்சியில் இருவர் கைது

0
199

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இருந்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புக்கு பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்டு 80 போத்தல் கசிப்பினை கொண்டு சென்ற இருவர், தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த குற்ற செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி – நெத்தலியாற்றுப்பகுதியில் இன்று அதிகாலை வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸரின் விசேட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.