கிளிநொச்சியில், கர்ப்பிணிப் பெண் மீது, கணவர் துப்பாக்கிச் சூடு

0
220

கிளிநொச்சியில், குடும்பத்தகராறு காரணமாக, ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் மீது, கணவர் இடியன் துப்பாக்கியால் சுட்டதில், படுகாயங்களுக்குள்ளான கர்ப்பிணிப் பெண், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.