கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில், தனிமையில் இருந்த முதியவர் ஒருவர், வீட்டின் பின் பக்கத்தில் இருந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தந்தையான, 65 வயதுடைய தம்பையா கந்தசாமி என்பவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர், பளை இத்தாவில் பகுதியில், தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, தனது தந்தையான தம்பையா கந்தசாமி என்பவரை, வீட்டில் விட்டு விட்டு, வவுனியாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற மகள், இன்று வீடு திரும்பிய நிலையில், சடலத்தை அவதானித்துள்ளனர். அதன் பின்னர், பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற, கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான், சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக, கிளிநொச்சி பொது வைத்தியசாலை கொண்டு செல்ல உத்தரவிட்டார். இந்த நிலையில், பளை பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.