கிளிநொச்சி பளை மாசார் பகுதியில், மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன், இளைஞன் ஒருவர், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில், சூட்சுமமான முறையில் மறைத்து, போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து, விசேட அதிரடிப் படையினர், வெற்றிலைக்கேணி கடற்படையுடன் இணைந்து, திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர், உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன், சந்தேக நபர், பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.