கிளிநொச்சி பள்ளிக்குடாவில் இறங்குதுறை இன்றி கடற்தொழிலாளர்கள் பாதிப்பு

0
119

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில், அதிகளவான கடற்தொழிலாளர்களைக் கொண்ட பள்ளிக்குடா பகுதியில், உரிய இறங்குதுறை வசதி இன்மையால், சுமார் 460ற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள், பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சுமார் 460 வரையான தொழிலாளர்கள், 300 ற்கும் மேற்பட்ட படகுகளில், தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், உரிய இறங்குதுறை வசதிகள் இன்மையால், தொழிலாளர்கள், தமது படகுகள் மற்றும் இயந்திரங்களை தொழில்களுக்கு கொண்டு செல்வதிலும், தொழிலுக்கு சென்று திரும்புவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, இறங்குதுறையை ஆழப்படுத்தி புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அவை இடைநடுவில் கைவிடப்பட்டதாக, கடற்தொழிலாளர்கள் கவலை வெளியிட்டனர்.

இதனால், இறங்குதுறையை உரியவாறு ஆழப்படுத்தி புனரமைத்து தருமாறும், கடற் கரையோரப் பகுதிகளை, கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, தடுப்புச் சுவர்களை அமைத்து தருமாறும், கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.