28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிளிநொச்சி மக்கள், குடிநீர் இன்மையால் பாதிப்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராம மக்கள், குடிநீர் இன்றிப் பாதிக்கப்பட்டுள்ளர்.

250 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், குடிநீரை பெற்றுக்கொள்வதில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள நீர் நிலைகள், உவர் நீராக காணப்படுவதனால், கரைச்சி பிரதேச சபை, பிரமந்தனாறு கல்லாறு குடிநீர்த் திட்டம் மூலம், குடிநீரை வழங்கி வந்தது.

இந்த நிலையில், பிரமந்தன் பகுதியில் உள்ள, நீர்த்தாங்கி மூலம், கல்லாறு கிராமத்திற்கு நீர் வழங்கப்பட்ட நிலையில், நீர் வழங்கல் நடவடிக்கை, பல நாட்களாக செயலிழந்து காணப்படுகின்றது.


அதனையடுத்து, மக்களுக்கான நீர் விநியோகத்தை வழங்க, உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles