கிளிநொச்சி மருத நகர் முருகேசு முன்பள்ளியில், சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு

0
212

முதியோர்களையும் பெற்றோர்களையும் போற்ற வேண்டும் என்பதுடன், அவர்களது போசாக்கு விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல், கிளிநொச்சி மருத நகரில் அமைந்துள்ள, முருகேசு முன்பள்ளியில் இடம்பெற்ற, சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வில், பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டார். சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு, முருகேசு முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது. முன்பள்ளி ஆசிரியர் ரஜினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கொடையாளர் எம்.குணரட்னம், கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் போது, முதியோர்கள் மற்றும் சிறுவர்களுக்கான பரிசில்களை, விருந்தினர்கள் வழங்கி மதிப்பளித்தனர்.