கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும்
வட மாகாண ஆளுநர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்தின், செ.கஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன, அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனை அதிகரித்தமை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் – காணி, பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.