கிளி. திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன் விழாவை முன்னிட்டு, நடைபயணம்!

0
89

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன் விழாவை முன்னிட்டு, பாடசாலை சமுகத்தினால், ஆரோக்கியத்தை பேணுவோம் என்ற தொனிப்பொருளில் நடைபயணம், இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை, வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான நடைபயணம், திருவையாறு பகுதியை அடைந்து, மீண்டும் பாடசாலையில் நிறைவடைந்தது.
இந்த நடைபயணத்தில், முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.