




ஒவ்வொருவரும் குடும்பங்களுக்கிடையே ஒற்றுமைகளை கொண்டிருக்கின்ற போதுதான் சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் என கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலையின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முருகானந்த ஆரம்ப பாடசாலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் க.கருணானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில பிரதம சிறப்பு விருந்தினர்கள் கௌரவ விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.அ.சிவனருள் ராஜா, கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் பொ.விஜயநாதன் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.