இலங்கையைச்சேர்ந்த 44 வயதுடைய லக்ஸ்மன் திலக்கரத்ன என்பவர் உணவு விநியோகத்தராக கடந்த 8 ஆண்டுகளாக டுபாயில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கட்டளையை பெற்றுக்கொண்ட நபருக்கு தாமதமாக உணவை விநியோகம் செய்தமையினால் வாடிக்கையாளர் குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வயிற்றில் பலத்த காயமடைந்த குறித்தநபர் அவருக்கு தெரிந்த ஒருவரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்தவாடிக்கையாளர் தவறான முகவரியை வழங்கியதால் மீண்டும் சரியான முகவரிக்கு உணவை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த விநியோகத்தர் வாடிக்கையாளரின் செயற்பாட்டுக்கு நியாயம் கேட்பதுடன் தான் மீள இலங்கைக்கு திரும்ப வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.