கூட்டு ஒப்பந்தத்தை அமுல்படுத்துமாறு கோரி நுவரெலியாவில் போராட்டம்!

0
267

தொழிலாளர்களின் நலன் கருதி மீண்டும் கூட்டு ஒப்பந்தம் வேண்டும் என கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று நுவரெலியா ஹட்டனில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் செங்கொடி
சங்கமும், இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனமும், தொழிலாளர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஹட்டனில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.