நுவரெலியா- நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல் கமுவ ஓயாவில் இருந்து, ஜந்து பிள்ளைகளின் தாய் ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான ஆறுமுகம் தனலெட்சுமி என தெரியவந்துள்ளது.
உறங்கிக்கொண்டுடிருந்து குறித்த பெண் திடிரென காணாமல் போனநிலையில், பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே கெசல்கமுவ ஓயாவில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு உறவினர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.