கெஹலியவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
21

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கந்த ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க, கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.


இந்த வழக்கு, இன்று, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

கெஹலிய ரம்புக்வெல, வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில், தனது கையடக்க தொலைபேசிக் கட்டணமாக, 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை, அரச அச்சக கூட்டுத்தாபன நிதியைப் பயன்படுத்திச் செலுத்தினார்.

இதனால், அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, கெஹலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.