கைதடி – நுணாவில் பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு-நால்வர் காயம்

0
154

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் பகுதியில் ஏ-9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில்
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ரரின் பின்புறமாக, கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் விபத்துச் சம்பவித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர்;, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பரே விபத்தில் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.