29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் திடீர் தீ!

தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயில் எரிந்துள்ளது.

ஹட்டன், நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதன்போது பண்ணைக்கு அருகிலுள்ள கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையம் வரை தீ பரவியதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் சுமார் ஒரு மணித்தியாலம் நிறுத்தப்பட்டதுடன், ஊழியர்களின் முயற்சியின் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையம் தீயிலிருந்து காப்பாற்றப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள், நிலையத்தில் காணப்பட்ட நீரைப் பயன்படுத்தி எரிபொருள் நிலையம் வரை பரவிய தீயினை பெரும் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles