கொரோனாத் தொற்றால் மேலும் 16 பேர் மரணம்!

0
108

நாட்டில் மேலும் 16 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 16 மரணங்களில் 8 பெண்களும், 8 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.