கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்புத் தேவை

0
285

நாட்டில் வேகமாக அரிகரித்துவரும் கொரோனாவின் ஆபத்தை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார்.
கொரோனா மூன்றாம் அலையில் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு தொற்றாளர்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும், மக்களின் அண்மைக்கால நடவடிக்கைகளில் அதிருப்தி நிலை காணப்படுகிறது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார்.
இன்று மாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.