கொரோனா தொற்றின் தாக்கத்தால் பக்க விளைவுகள் ஐந்து மடங்கு அதிகரிக்கும்!

0
102

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளை விட கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியை வைத்தியர் பிரியதர்ஷனி கலபத்தி தெரிவித்தார்.

தடுப்பூசியை பெறும் போது வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகளே ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.