நாட்டில் இன்று மேலும் 766 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 91 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை 48 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதில் 6,057 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 625 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 232 பேர் இதுவரை உயிரிழந்தனர்.