கொழும்பின் பல பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் நாளை இரவு 7 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 5 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.