கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்..!

0
134

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கையில், அசாதாரண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு மாநகர சபை, கொதட்டுவ போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரும் வைத்தியருமான ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நுளம்புகளின் அடர்த்தி ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக பிரிட்டோ குறியீட்டு மதிப்பு 5 சதவீதமாக ஆக இருக்க வேண்டும் என்றும் ஆனால் கொழும்பில் சில பகுதிகளில் 25 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டம் அதிக தொற்றுநோய் நிலைமைக்கு அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.