கொலன்னாவ நீருந்து நிலையத்தின் பிரதான விநியோக கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளமை காரணமாக இன்று 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை குறித்த நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, கோட்டே, நாவல, கொஸ்வத்த உள்ளிட்ட பிரதேசங்களிலும் நாவல திறந்த பல்கலைக்கழக பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து பக்க வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.