உலக சுகாதார ஸ்தாபனம், கொவிட்-19 தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டல் கோவையை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்து பரிந்துரைத்துள்ளது. அத்துடன், கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டவர் அறிகுறிகளுடன் காணப்பட்டால் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் எனவும், அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஓ.டீ.டீ 1.5 என்ற ஒமிக்ரோன் வைரஸ் உப திரிபு, கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முறையாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது. தற்போதுவரை இந்தப் புதிய திரிபு, அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் பரவியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.