கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் விஜயதசமி பூசையும்,
வித்தியாரம்பம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

0
143

இந்துக்களின் பாரம்பரிய சடங்குகளில் ஒன்றான விஜயதசமி அன்று புதிதாக கற்றலில் ஈடுபடவுள்ள மூன்று வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு குருவின் மூலம் வித்தியாரம்பம் செய்து வைக்கப்படுவதுடன், புதிதாக தொழில் துறைகளை ஆரம்பிப்பவர்கள். இந்நாளில் நற்காரியங்களை ஆரம்பித்தால் வளமாக வாழலாம் என்பது நம்பிக்கையாகும்.

இதற்கமைய கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் அதிபர் செல்வராசாவினால் மாணவர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைக்கப்ட்டதுடன், சிவஸ்ரீ தனுராஜ சர்மாவினால் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று பாடசாலை வளாகத்தில் கும்பம் சொரிதலுடன் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.