



கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில்உள்ள வீடொன்றின் சமையல் அறையில் வடிசாராயம் வடித்துக்கொண்டு இருந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 15 லீற்றர் வடிசாராயம் மற்றும் வடிசாராயம் வடிக்க பயன்படுத்திய உபகரணங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்,