கோப்பாய் பொலிசாரினால்  உரும்பிராயில் திடீர் சுற்றி வளைப்பு!

0
146

கோப்பாய் பொலிசாரினால்  இன்றுதிடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது

 யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதை பொருட்களுன்  கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாண பிரதி போலீஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இன்றைய தினம் கோப்பாய்  போலீஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது

  சுற்றி வளைப்பின் போது ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 24 போத்தல்  கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாககோப்பாய் பொலிசார்  தெரிவித்தனர்