சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த சகோதரன் கைது!

0
206

சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த இளைய சகோதரர் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துபிட்டிவல – ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவராவார்.
சம்பவத்தில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், சகோதரியின் பிள்ளையின் பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீயில் எரிவடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.