சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

0
325

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் ,கூழாவடி மற்றும் ஊறணி பகுதியில் நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 மில்லி லீட்டர் கொள்ளவனவுடைய 307 மதுபான போத்தல்களும் , 750 மில்லி லீட்டர் கொள்ளவனவுடைய 8 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விற்பனையில் ஈடுபட்ட நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தெரிவித்துள்ளார் .

பயணத்தடை அமுல்படுத்துகின்ற நாட்களில் அதிக விலையில் மதுபானங்களை விற்பனை செய்வதற்காக கொள்வனவு செய்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்க முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.