கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கு அமைச்சர்கள் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.சதொச நிறுவகத்தை ஸ்தாபித்ததன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடையாததாலும் பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிக்காததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, சதொச மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக செயற்பாட்டு மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்து உத்தேச மறுசீரமைப்பு செயற்பாட்டை நடைமுறைப்படுத்த அமைச்சர் நளீன் பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.