மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய முன்றலில் அமைக்கப்பட்ட பாலன் குடில் இன்று மாலை ஒளியூட்டி திறந்து
வைக்கப்பட்டது.
சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், கிறிஸ்து பிறப்பு பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் நிலைய வளாக முன்றலில், பொலிஸ் உத்தியோகத்தர்களினால் அமைக்கப்பட்ட பாலன் குடில்
பொதுமக்கள் பார்வைக்கு ஒளியூட்டி திறந்து வைக்கப்பட்டது
அருட்தந்தை பி.ஜெரோம் போல் அடிகளாரினால் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், பாலன் குடில் ஒளியூட்டும் நிகழ்வு; இடம்பெற்றது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.