சம்மாந்துறை கோரக்கர் சுவாமி திருவுருவ சிலைக்கு கும்பாபிஷேகம்

0
167

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் கோரக்கர் சுவாமியின் திருவுருவசிலைக்கு இன்று கும்பாபிஷேகம் இடம் பெற்றது.

ஆலயத்தலைவர் பாலசுப்ரமணியம் ஏற்பாட்டில் காரைதீவு வாமதேவ சிவாச்சாரியார் கனேச உபாசகர் கிரியாதிலகம் ஜோதிடமணி சாந்தரூபன் குருக்களின் தலைமையில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம் பெற்றன.

இலங்கையில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் சித்தர்களின் நாமத்தைக் குறிக்கும் சம்மாந்துறை கோரக்கர் ஆலயம் கடந்த 1100 ஆண்டுகளுக்கு முன்னராக கோரக்கர் முனிவர் காலடி பதித்த இடமாகக் கருதப்படுவதுடன் இச்சந்நிதானத்தில் அவர் வாழ்ந்த சிறப்பம்சங்கள் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆலய வளாகத்தில் காட்டுமா என்ற விருஷ்சம் அமைந்திருப்பது சிறப்பம்சம் என்பதுடன் அவுஸ்ரெலியா சிவனருள் அறக்கட்டளை நிறுவனத்தாரின் நிதி உதவியில் இவ்வாலயம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.