சாய்ந்தமருதில் கர்ப்பவதிகளுக்கு தேவையான பொதிகள் வழங்கல்

0
24

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம கர்ப்பவதிகளுக்கு பிரசவத்துக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கண்டி மனிதாபிமான அமைப்பின் அனுசரணையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக், கண்டி மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகளான திருமதி ராஷிதா, எம். என். எம். நௌஷாத், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 25 கர்ப்பவதிகளுக்குத் தேவையான பொதிகள் வழங்கப்பட்டன.