வெள்ள அனர்த்தத்தின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதனின் தலைமையிலான குழுவினர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை – களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் டெங்கு நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.