சிங்கப்பூரில் தேர்தல் திகதி அறிவிப்பு

0
3

சிங்கப்பூர் பாராளுமன்றம் நேற்று (15) கலைக்கப்பட்டதையடுத்து பொதுத் தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து சிங்கப்பூரின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது. இதனை தொடர்ந்து மே 3ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தல்இ சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள 14 ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.இந்நிலையில் ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.