சித்தாண்டி இளஞ் சைவ மாணவ
மன்ற பொன்விழா விருது வழங்கல் நிகழ்வு

0
295

சித்தாண்டி இளஞ் சைவ மாணவ மன்ற பொன்விழா விருது வழங்கல் நிகழ்வு இன்று காலை இளஞ் சைவ மாணவ மன்ற தலைவர் வி. உதயகுமார் தலைமையில் வந்தறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.
பொன் விழாவின் ஆரம்ப நிகழ்வில் வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலில் இருந்து பூஜைகள் ஆரம்பமானதும்.

நந்திக் கொடி அத்துடன் இளஞ் சைவ மாணவ மன்ற கொடிகள் புடைசூழ தேவார முதலிகளின் திருவுருவப்படங்கள் தாங்கிஇ திருமுறைகள் ஓத சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் இருந்து முச்சந்தி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்ததும் முச்சந்திப் பிள்ளையாருக்கு விசேட பூசை இடம்பெற்றதுதிருமுறை பேரணி பொன் பொன்விழா விருது வழங்கல் வைபவம் இடம்பெறும் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய நல்லையா மண்டபத்தை வந்தடைந்தது.

பின்னர் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேற்கப்பட்டது நந்திக்கொடி இளம் சைவ மாணவர் மன்ற கொடி ஆகியாவை ஏற்றப்பட்டதும். மன்ற கீதம் பாடப்பட்டது.அதன் பின்னர் மண்டபத்துக்குள் அருவிகள் அழைக்கப்பட்டாலும் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு தேவாரம் இசைக்கப்பட்டது.இடம்பெற்ற பொன்விழா நிகழ்வில் வரவேற்புரை மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.அதன் பின்னர் மன்றத்தின் ஸ்தாபகர் உள்ளிட்ட மன்றத்திற்க்காக அரும்பாடுபட்ட நீத்தார் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் சுவாமி நீலமாதவனந்தாஜீ மகராஜ் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார்.

இடம்பெற்ற பொன்விழா நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம்இ சிறப்பு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் அ. பகீரதன் ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக பலரும் கலந்து கொண்டிருந்தனர்.பொன் விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பொன்விழா சிறப்பு மலர் மன்றத்தின் தலைவர் பி உதயகுமார் வழங்கி வைத்த ஆன்மிக அதிதியாக கலந்து கொண்டு சுவாமி கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு வழங்கி வைத்து பொன்விழா நூல் வெளியீடு இடம்பெற்றது.
பொன் விழாவை முன்னிட்டு சித்தாண்டி பதி பகுதியிலுள்ள கிராமத்து மருத்துவச்சிகள் அண்ணாவியார் முறிவு வைத்தியர் நன்கொடையாளர்கள்இ கலைஞர்கள் ஜோதிடர் உள்ளிட்ட பலருக்கு கௌரவிப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் மன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் எனப் பலருக்கும் பொன்விழா நூல் நினைவுச் சின்னங்கள் என்பன அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது கொரவிக்கப்பட்டது.